Meenatchi amman koil Aadi Mulaikattu

உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் ஆடிமுளைக்கொட்டுத் திருவிழா ஆகஸ்ட் மாதம் 1 – ஆம் தேதி தொடங்க இருக்கிறது.

தமிழகத்தில் ஆடிப்பட்டம் தேடி விதை என்ற வாக்கின்படி விவசாயிகள் ஆடி மாதத்தில் விதை விதைப்பில் ஈடுபடுவது வழக்கம். தங்கள் நிலங்களில் அமோக விளைச்சல் வேண்டி முளைக்கட்டு வைத்து இறைவனை வேண்டி வழிபாடு நடத்துவர். இதன்படி  மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் ஆடி முளைக்கொட்டுத் திருவிழா வரும் ஒன்றாம் தேதி தொடங்க உள்ளது. 

அம்மன் சந்நிதி முன்புள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு விழா தொங்கும். முளைக்கட்டு திருவிழா 10 நாள்கள் திருவிழா நடைபெறுகிறது. திருவிழாவையொட்டி மீனாட்சியம்மன் பஞ்சமூர்த்திகளுடன் காலை, மாலை வேளைகளில் ஆடி வீதியில் சிறப்பு நாதஸ்வர கலைஞர்கள், தவில் வித்வான் ஆகியோரின் இன்னிசையுடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். 

இதில் ஆகஸ்ட் 7-ஆம் தேதி ஏழாம் நாள் திருவிழாவில் இரவு திருவீதியுலா முடிந்த பின்னர் உற்சவர் சந்நிதியில் அம்மன், சுவாமி மாலை மாற்றும் வைபவம் நடைபெறுகிறது என்று திருக்கோயில் இணை ஆணையர் ந.நடராஜன் தெரிவித்துள்ளார்.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *