Atthi varadhar thiruvizha

40 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் அத்தி வரதர் திருவிழா நாளை மறுதினம் துங்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

108 திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் அத்தி வரதர் திருவிழா நாளை மறுநாள் ஜூலை 1 ஆம்தேதி துவங்கவுள்ளது அதற்கான ஏற்பாடுகள் இரவு பகலாக தீவிரமாக நடைபெற்று வருகின்றது

வரதராஜ பெருமாள் கோவில் குளத்தில் இருந்து அத்தி வரதரை நேற்றிரவு வெளியே எடுத்தனர் ஆனால் பக்தர்கள் பார்க்க அனுமதியில்லை திங்கள் கிழமை ஜூலை 1 ஆம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 17 ஆம் தேதி வரை பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தரிசனத்திற்க்காக வைக்கப்படவுள்ளது

இந்த அத்தி வரதர் திருவிழைவை முன்னிட்டு ஜுலை 1 ஆம் தேதி காஞ்சிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகள் ஒருநாள் விடுமுறையும் மீதமுள்ள 47 நாட்கள் அரை நாட்கள் மட்டுமே இயங்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது

அத்தி வரதர் திருவிழாவுக்காக தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு என 5 மொழிகளில் தகவல் பலகை (வழிகாட்டி) வைக்கப்படவுள்ளனர்

5 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையம் ஆங்காங்கே குடிநீர் தொட்டி கழிப்பறைகள் அமைக்கப்பட்டு வருகின்றனர் 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் எந்த கோவிலுக்கு சென்றாலும் கோவிலில் ஒரு உற்சவரை மட்டுமே தரிசிக்க முடியும் ஆனால் அத்தி வரதர்திருவிழாவின் சிறப்பு 40 ஆண்டுக்கு ஒரு முறை ஒரே நேரத்தில் இரண்டு உற்சவரை தரிசிக்கலாம்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *