Maduraiyil Ulaga siddhargal manadu

உலக சித்தர்கள் ஞானபீடம்  நடத்தும் உலக சித்தர்கள் மாநாடு 2019 வருகின்ற ஜூன் மாதம் 22 சனி மற்றும் 23 ஞாயிறு இரண்டு நாட்கள் மதுரை தமுக்கம் மைதானத்தில் மிகவும் சீரும் சிறப்புமாக நடைபெற உள்ளது.

இதில் 100008 ருத்ராட்சம் மூலம் உருவாக்கப்பட்ட 18 அடி உயர சிவலிங்கம் தரிசனம், 1008 திருவிளக்கு பூஜை, சித்தர்கள் முறைப்படி 108 யாக வேள்வி, 108 சங்குநாதம், கைலாய வாத்தியம், நமது பாரம்பரிய நாட்டுப்புற இசை போன்றவை நடைபெற உள்ளன.

இதேபோல பட்டிமன்றம், பரதநாட்டியம், யோகா, சிலம்பம், நீலகிரி படுகர் நடனம், மற்றும் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளது. மேலும் 640 பக்கம் கொண்ட மாநாடு மலர் வெளியீட படவுள்ளது.

2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டுக்கு அனுமதி இலவசம். 2 நாட்களும அன்னதானம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *