Dyanathin Palangal

மனித வாழ்க்கை நிரந்தரமற்றது. இன்ப துன்பம் நிறைந்தது. மன மகிழ்ச்சியும் உண்டு. மனக் குழப்பமும் உண்டு. நெருக்கடியான உலகுக்கு முகம் கொடுக்கும் மனிதன் பல்வேறுபட்ட விடயங்களை ஒரே நேரத்தில் விரைவாக செயல்படுத்துகின்ற போது அல்லது முனைகிற போது மனநெருக்கடி ஏற்படுகின்றது. 

இதனால் அவன் மன அழுத்தத்திற்கு ஆளாகி அநேக நோய்களுக்குள் சிக்கித் தவிக்கின்றான். குறிப்பாக நீரிழிவு, மாரடைப்பு, இரத்த அழுத்தம், அஸ்மா, கோபம், நித்திரையின்மை போன்றவைகளைக் குறிப்பிடலாம். விஞ்ஞான ரீதியாக இது நிரூபிக்கப்பட்டுள்ளது.

பதஞ்சலி முனிவரின் யோக சூத்திரத்தின் படி தியானம் ஏழாவது உறுப்பு ஆகிறது. அலையும் மனதை ஒருமுகப்படுத்துவது தியானம் ஆகும்.. தியானத்தை ஜாதி, மதம், இனம், மொழி, நாடு, ஆண், பெண் வயது என எந்த வேறுபாடின்றி செய்து பயன்அடையலாம்.

மனஅமைதி கிடைக்கும்.  
படபடப்பு குறையும்
நினைவாற்றல் அதிகரிக்கும்.
நல்ல ஆழ்ந்த தூக்கத்தை ஏற்படுத்தும்.
வேலை செய்யும் ஆற்றல் அதிகமாகும்.
ரத்த அழுத்தம் குறையும்.
ஆஸ்துமா குணமாகும்.
அனைத்து நோய்களையும் குணப்படுத்த முடியும்
ஆயுள் அதிகரிக்கும்.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *