Akshaya Thiruthiyai Idhayum Seyalame

அட்சய திருதியை நாள் அன்றுதான் அன்னை பராசக்தி ஈசனுக்கு அன்னம் அளித்தார்களாம். எனவே இந்த நாளில் அன்னதானம் செய்வதும் சிறப்பான பலனைத் தரும்.

அட்சய திருதியை நாளில் அன்னதானம் செய்தால் இறைவனுடககே அன்னமிட்ட பலன்கள் கிடைக்கும். 

 அட்சய திருதியை அன்று குழந்தைகளுக்கு எழுத கற்றுக் கொடுத்தால் அவர்களது கல்விச் செல்வம் பெருகும்.

அட்சய திருதியை அன்று புண்ணிய நதிகளில் நீராடினால் பாவம் போகும். 

 அட்சய திருதியை அன்று கிருஷ்ணர் வழிபாட்டை மேற்கொண்டால் கேட்ட வரங்கள் கிடைக்கும்.

ஏழைகள், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர் ஆகியோருக்கு செய்யும் தான தர்ம உதவிகள், பல பிறவிகளுக்கு புண்ணிய பலன் தரும்.

புத்தாடைகள் தானம் செய்தால் நோய்கள் நீங்கும். 

கற்பூரம் தானம் செய்தால் சக்ரவர்த்தியாகும் பிறப்பு கிடைக்கும்.

தாழம்பூ தானம் செய்தால் மகாவிஷ்ணுவின் அருள் கிடைக்கும்.

பாக்கு, வாசனைத் திரவியங்கள், பழங்கள் தானம் செய்தால் உயர் பதவி கிடைக்கும்.

தானியங்கள் தானம் செய்தால் அகால மரணத்தில் இருந்து தப்பிக்கலாம்.

மோர், பானகம், குடிநீர் ஆகியவற்றை தானம் செய்தால் முற்பிறவி பாவம் தீர்ந்து வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.

முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் வறுமை நீங்கும்.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *