Thirumalai Varaga swamy

திருமலையில் உள்ள வராக சுவாமி நான்கு மாடவீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வடக்கு மாடவீதியில் உள்ள ஆதிவராக சுவாமி கோவிலில் நேற்று ஆகம முறைப்படி கும்பாபிஷேகம் நடைபெற்றது. 23, 24, 25 ஆகிய மூன்று தினங்கள் தொடர்ந்து யாகசாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது.

இன்று யாகம் பூர்ணாவுதியுடன்  நிறைவு பெற்றது. இதையடுத்து கும்பத்தில் உள்ள ஜீவ சக்தியை மீண்டும் மூலவருக்கு கொண்டு வரப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன் வழிபட்டனர். 

இதைதொடர்ந்து இரவு வராக சுவாமி நான்கு மாடவீதிகளில் எழுந்தருளி வலம் வந்து  பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் செயல்  இணை செயல் அலுவலர் சீனிவாசராஜு, முதன்மை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலர் கோபிநாத் உள்ளிட்ட அதிகாரிகள், பக்தர்கள் பங்கேற்றனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *