Thirupathy Secrets

திருப்பதி என்றாலே நல்ல திருப்பங்களை கொடுக்க கூடிய இடம் தான் . ஏழுமலையானை எந்த  தினத்தில் வணங்கினால்,செல்வம் மேலும் மேலும் பெருகும் என்பதை பணவளக்கலை தெரிவித்துள்ளது

ஏழு சக்கரத்தையும் ஆதாரமாக வைத்து, ஏழு சக்கரங்களையும் முழு வீச்சில் இயக்கி,ஏழு மலையிலும் பிரசிக்க வைத்து,அவர் கையில் இருக்க கூடியது சொர்ண முத்திரை,சொர்ணசக்கரம்..சொர்ண வைரவர் தான் செல்வத்திற்கு அதிபதி..அதனால் தான் செல்வம் அங்கு வந்து சேருகிறது. கடன் பிரச்னை,தொழில் பிரச்சனை என அனைத்திற்கும் ஒரு நல்ல வழி கிடைக்கும்.செல்வம் பெருகும்…ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கும்..

தமிழ் மாதம் முதல் திங்கட்கிழமை அன்று,காலை நேரத்தில், ஏழுமலையானை வழிபட்டால் கண்டிப்பாக வாழ்வில் நடக்கும் பல அற்புதங்களை  கண் கூடாக பார்க்க முடியும். 12 மாதங்கள் இதனை கடைபிடிக்க வேண்டுமாம். அதாவது தை மாதம் தொடங்கி மார்கழியில் முடிக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் சென்று வர  படிப்படியாக  கண்டிப்பாக  செல்வம்  பெருகும் என்பது  ஐதீகம்
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *