Thiruvannamalai Car fest

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தங்கத் தேர் வெள்ளோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இருந்த தஙகத்  தேர் பழுதானதால் 3½ ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாமல் போனது.

ரூ. 3 லட்சம் மதிப்பில் தங்கத் தேர் சீரமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடந்தது. அந்த பணி நிறைவு பெற்று நேற்று வெள்ளோட்டம் நடந்தது.

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட தங்கத் தேர் உட்பிரகாரத்தில் வலம் வந்தது.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *