Vadapathra kali amma koil thiruvizha

சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சியிலுள்ள காளியம்மன் நகர் பகுதியிலுள்ள அருள்மிகு ஸ்ரீ வட்பத்திரகாளியம்மன் திருக்கோவிலில் 107 ம் ஆண்டு திருவிழா நடைபெற்றது. 

இதனையொட்டி காளியம்மனுக்கு நூற்றுக்கணக்கானோர் வேண்டுதல்களை நிறைவேற்றும் விதமாக அக்னிகரகம், பூங்கரகம், அளகு குத்தல் உள்ளிட்டவைகளை எடுத்து கோவிலை சுற்றி வந்து நேர்த்தி கடன் செய்தனர். 

இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர், இந்த திருவிழாவையொட்டி சாமி அலங்காரம் சிறப்பான தோற்றத்தில் காட்சியளித்தது பக்தர்களை பரவசமூட்டியது.

இதில் வேண்டுதல்களை நிறைவேற்றும் போது மிரள் வந்து பலர் சாமியாடியது குறிப்பிடத்தக்கது.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *