Vallalar thayar illathil

தை பூசத்தையோட்டி சின்னகாவனம் கிராமத்தில் வசித்த வள்ளலார் தாயார் இல்லத்தில் வள்ளலார் வருவிக்க திருவிழா பக்தர்கள் சார்பில் சிறப்பு பிராத்தனைகளுடன் பொது மக்களுக்கு பசியாற்றுவித்தார் நிகழ்ச்சி நடைபெற்றது 

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சின்னகாவனம் கிராமத்தில் திரு அருட்பிரகாச வள்ளலாரை பெற்றுஎடுத்த தாயார் சின்னம்மையார் பிறந்த கிராமமாகும். 
வள்ளலார் தனது தாயாருடன் குழந்தை பருவத்தில் 1824முதல் 1827 வரை தாயாருடன் வளர்ந்து வந்தார் வள்ளலாரின் தாயார் வசித்த இடத்தில் பக்தர்கள் சார்பில் வள்ளலார் தாயார் சின்னம்மையார்நினைவு இல்லம் அமைக்கப்பட்டு நாள்தோரும் அன்னதானம் நடைபெற்று வருகின்றன.
இங்கு ஆண்டு  தை பூச திருநாளில் திரு அருட்பிரகாச வள்ளலார்  அவதரித்தநாளை  பக்தர்கள் சார்பில் வள்ளலார் வருவிக்க திருவிழா கடைபிடிக்க பட்டு அங்குள்ள அமைக்கப்பட்டுள்ள அணைய வள்ளலார்ஜோதி விளக்கு முன்பு திருவருட்பா ஓதுதலுடன்  சிறப்பு வள்ளலார் ஜீவகாருணிய ஒழுக்க பிராத்தனைகளுடன்  பொது மக்கள் அனைவருக்கும்  பசியாற்றுவித்தல்  அன்னதான நிகழ்ச்சியுடன்  தை பூச வள்ளலார் வருவிக்க திருவிழா சிறப்பாக  நடைபெற்றது இவ்விழாவில் சென்னை ,காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த வள்ளலார் மெய் அன்பர்களும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *