adhi-sakthi-peedamaga-vilangum-dhara-dharani-koil

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டம் பெர்ஹாம்பூருக்கு அருகில் பூர்ணகிரி மலைத் தொடரில் அமைந்துள்ளது தாராதாரிணி கோயில். ஒடிசாவின் தெற்கு பகுதி மக்களின் குலதெய்வமாக விளங்கும் இக்கோயில் ஆதி சக்தி பீடமாக விளங்குகிறது.

பார்வதி தேவி, தந்தை தட்சன் நடத்திய யாகத்துக்கு அழையாத விருந்தாளியாக சென்று அவமானப்பட்டு கோபத்தில் யாக அக்னியில் விழுந்து தன் உயிரை மாய்த்துக் கொள்கிறாள். அப்போது பார்வதி தேவியின் மார்பு விழுந்த இடமே இந்த இடம்.

பெர்ஹாம்பூரில் அமைந்துள்ள தாராதாரிணி ஆலயத்தில் இரண்டு தேவிகள் உள்ளனர். பெரியவளுடைய பெயர் தாரா, சிறியவள் தாரிணி. கல்லில் முகம் போன்று செதுக்கப்பட்டு உள்ள அந்த சிலைகளுக்கு அழகுற அணிகலன்கள் அணிவித்து பெண்ரூபமாக முதலில் அங்கு குடியேறி இருந்த ஆதிவாசிகள் வணங்கி வந்தனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *