rameswaram-koilil-naalai-arudhra-thiruvizha

ராமேசுவரம் கோவிலில் ஆருத்ரா திருவிழா வெள்ளிக்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.

காலை கோவிலின் 3-ம் பிரகாரத்தில் 1 லட்சம் ருத்ராட்சைகளால் ஆன மண்டபத்தில் வீற்றிருக்கும் நடராஜருக்கு காப்பு கட்டப்பட்டு சிறப்பு மகா தீபாராதனை பூஜைகள் நடைபெறுகின்றன.

தொடர்ந்து 15-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை மாணிக்கவாசகர் தங்ககேடயத்தில் நடராஜர் சன்னதியில் இருந்து புறப்பட்டு கோவிலின் 3-ம் பிரகாரத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 23-ந் தேதி அன்று ஆருத்ராதரிசன நிகழ்ச்சி நடைபெறுகிறது.அன்று அதிகாலை 3 மணியில் இருந்து 4.30 மணி வரை நடராஜர்-சிவகாமி அம்பாளுக்கு பால்,பன்னீர்,திரவியம்,மாபொடி,மஞ்சள் பொடி உள்ளிட்ட பல பொருட்களால் சிறப்பு மகா அபிஷேகம் நடை பெறுகிறது.தொடர்ந்து நடராஜர்-சிவகாமிஅம்பாளுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு மகா தீப ஆராதனை பூஜைகள் நடைபெறுகின்றன.

திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மங்கையர்க்கரசி தலைமையில் உதவிகோட்டபொறியாளர் மயில்வாகனன், சூப்பிரண்டுகள் காரின்ராஜ், பாலசுப்பிரமணியன், பேஷ்கார்கள் கண்ணன், அண்ணாதுரை, கலைச்செல்வன், செல்லம், கமலநாத உள்பட திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

ஆருத்ரா திருவிழாவையொட்டி வருகிற 23-ந் தேதி அன்று கோவில் நடை திறப்பில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அன்று அதிகாலை 2 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 2.30 மணியில் இருந்து 3.30 மணி வரை ஸ்படிகலிங்க தரிசனமும் நடைபெற்று அதிகாலை 5.15 மணிக்கு நடராஜர் சன்னதியில் ஆருத்ரா தரிசனம் நடை பெறும் எனவும் திருக்கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *