thirupathiyil-viraivaga-darisanam-seyya

திருப்பதி ஏழுமலையானை வழிபட பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கூட்டநெரிசலை தடுக்க தேவஸ்தான அதிகாரிகள் புதிய திட்டத்தை அமல்படுத்தவுள்ளனர்.

இதற்காக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், வைகுண்டம் கியூ காம்பிளக்ஸ் யானை தடுப்பு முதல் ஏழுமலையான் கோயில் மகா துவாரம் வரை பக்தர்கள் பல நேரங்களாக காத்திருப்பதாக தேவஸ்தான முதன்மை செயல் அதிகாரி அனில்குமார் தெரிவித்தார்.

பக்தர்களின் கூட்ட நெரிசலை தடுக்க, ஏழுமலையான வழிபட அமைக்கப்பட்டுள்ள தரிசன வரிசையில் புதிய மாற்றங்களை தேவஸ்தான நிர்வாகம் அமல்படுத்தவுள்ளதாக இந்த கூட்டத்தில் அனில்குமார் பேசினார்.

மேலும், திருப்பதி கோயிலுக்கு உகந்த லட்டு அருட்பண்டத்தை கூடுதலாக தயாரிக்க, மேலும் ஒரு பூந்தி தயாரிக்கும் கூடம் கட்டப்பட்டு வருவதாக அவர் கூறினார். இதுதவிர, தமிழகத்தின் கன்னியாகுமாரியில் வெங்கடேஸ்வரா கோயில் சிமெண்டு சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக பேசிய திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல அதிகாரி அனில்குமார், சிமெண்டு சாலை உடன் குடிநீர் வசதி நிலையங்கள், கழிவறைகள் கட்டும் பணி ஆகியவையும் நடைபெற்று வந்தது. இவை அனைத்தும் விரைவில் முடிக்கப்படும் என்று தெரிவித்தார்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *