sankararameswaran-koil-therottam

தூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோயிலில் தேரோட்டத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேசுவரர் கோயிலில் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் ஐப்பசி மாதம் நடைபெறும் திருக்கல்யாண திருவிழாவும் ஒன்றாகும். இந்த விழா கடந்த 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி அம்பாளுக்கு தினமும் சிறப்பு அபிஷேகமும், ஆராதனைகளும் நடைபெற்றன.

அம்பாள் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். முக்கிய விழாவான நேற்று காலை 10 மணியளவில் திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

பத்தாம் நாளான இன்று காலை மஞ்சள் இடித்தல், பாகம்பிரியாள் அம்பாளுக்கு குடமுழுக்கு தீர்த்தவாரி தீபாராதனை, இரவு 7 மணிக்கு பாகம்பிரியாள் அம்பாள் சிவபூஜை செய்யும் அலங்காரத்தில் பூப்பல்லக்கில் வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது. முக்கிய விழாவாக நாளை இரவு திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *