sarva-bopala-vaganathil-ezhumalayan

நவராத்திரி பிரம்மோற்சவத்தின் நான்காவது நாளில் ஏழுமலையான் கோயில் கோபுர வடிவிலான தங்க சர்வ பூபால வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

சர்வ பூபால வாகனத்தில் சுவாமியை தரிசனம் செய்வதால் வாழ்கையில் அகங்காரத்தை ஒழித்து நிரந்தரமான பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் சுவாமி வீதிஉலாவின் போது நான்கு மாடவீதியில் திரண்டு இருந்த பல்லாயிரக்கணக்காண பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி மனம் உருகி சுவாமியை வழிபட்டனர்.

இதில் ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்ட்ரா, கர்நாடக மாநிலங்களை சேர்ந்த பக்தர்களின் கோலாட்டம், பஜனைகள், பல்வேறு வேடம் அணிந்த பக்தர்களின் அணிவகுப்பு ஆகியவை நடைபெற்றன.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *