thirupathy-calendar-dairy-sale

திருமலை திருப்பதி தேவஸ்தான நாட்காட்டிகள், டைரிகள் ஆன் லைன் மூலம் விற்பனை செய்யப் பட உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதன் விற் பனையை வரும் 14ம் தேதி முதல் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைக்க உள்ளார்.

திருப்பதியில் வருடாந்திர பிரம் மோற்சவம் வரும் 13-ம் தேதி தொடங்க உள்ளதால், 12- ம் தேதி கோயிலில் ஆகம விதிகளின்படி அங்குரார்பணம் நடைபெறுகிறது. பின்னர், 13-ம் தேதி கொடியேற் றத்தை தொடர்ந்து, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பட்டு வஸ்திரங்களை அரசு சார்பில் ஏழுமலையானுக்கு காணிக்கையாக வழங்க உள்ளார்.

பின்னர் மறுநாள், 2019-ம் ஆண்டின் தேவஸ்தான நாட்காட்டி மற்றும் டைரிகளை கணினிமய மூலம் வெளியிட்டு விற்பனையை தொடங்கி வைக்கிறார். இதனை தொடர்ந்து, உலகம் முழுவதும் உள்ள ஏழுமலையான் பக்தர்கள், நாட்காட்டிகள், டைரிகளை கணினிமய மூலம் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *