thunbangal-vilakum-ambigai-sthuthi

துன்பம் விலகி நன்மைகள் உண்டாக்கும் அபிராமி அம்பிகை ஸ்துதியை. செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் இந்த ஸ்துதியை சொல்லி வந்தால் வாழ்வில் சகல செல்வங்களும் வந்த சேரும்….

மங்களம் தரும் அபிராமி அம்பிகை ஸ்துதி
காலையாத கல்வியும் குறையாத
வயதுமோர் கபடு வாராத நட்பும்
குன்றாத வளமையுங்குன்றாத இளமையும்
கழுபிணி யிலாத உடலும்
சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்
தவறாத சந்தானமும் தாழாத கீர்த்தியும்
மாறாத வார்த்தையும் தடைகள் வாராத
கொடையும் தொலையாத நிதியமும்
கோணாத கோலுமொரு துன்பமில்லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தின் அன்பும் உதவிப் பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே
ஆதிகடவூரின் வாழ்வே அமுதீசர் ஒரு பாகம்
அகலாத சுகபாணி அருள்வாய் அபிராமியே.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *