ezhumalayan-pushpa-pallakil-bavani

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆனிவார ஆஸ்தானத்தையொட்டி ஸ்ரீதேவி, பூதேவியருடன் மலையப்ப சுவாமி புஷ்ப பல்லக்கில் ஏழுமலையான் நேற்றிரவு நான்கு மாடவீதியில் பவனி வந்தார்.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.மேலும் நேற்று காலை சுப்ரபாத சேவையில் இருந்து இரவு 7 மணி வரை 51 ஆயிரத்து 776 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இலவச தரிசனத்தில் வைகுண்டத்தில் உள்ள 27 அறைகளில் காத்திருந்த பக்தர்கள் 15 மணி நேரத்திற்கு பிறகு சுவாமி தரிசனம் செய்தனர்.

300க்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள், மலைப்பாதையில் பாத யாத்திரையாக நடந்து வந்து திவ்ய தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் 2 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர். நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று காலை வரை கோயிலில் தரிசனம் செய்த பக்தர்களின் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. இதில், பக்தர்கள் ரூ.3.45 கோடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *