indru-ramanathapuram-kothandrama-swami-kovil-utsavam-arambam

ராமநாதபுரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோதண்டராம சுவாமி திருக்கோவில் உள்ளது. ராமநாதபுரம் சமஸ்தானத்துக்குட்பட்ட இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனித்திருவிழா விமரிசையாக கொண்டாப்படும்.அதன்படி இன்று (13-07-2018) காலையில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து தினசரி இரவு கோதண்டராம சுவாமி வெவ்வேறு வாகனங்களில்அலங்காரமாக எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகளில் வீதியுலா வரவுள்ளார். ஜூலை 18 ஆம் தேதி திருக்கல்யாணமும், ஜூலை 21 ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது. ஜூலை 22 ஆம் தேதி தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெறுகிறது. இத்திருவிழாவில் கலந்து கொண்டு கோதண்டராம சுவாமி அருள் பெற எண்ணற்ற பக்தர்கள் இத்திருத்தலத்திற்கு வருகிறார்கள்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *