sani-mattrum-raagu-dhosham-neekum-ettiyathali-agastheeswarar

புதுக்கோட்டை, அறந்தாங்கியிலிருந்து, 5 கி.மீ தூரத்திலுள்ளது எட்டியத்தளி. இங்கு 2000 ஆண்டுகள் பழமையான சிவ திருத்தலமுள்ளது. இக்கோவில் காளிங்கராய மன்னனால் கட்டப்பட்டது. இக்கோவிலின் மூலவர் அகஸ்தீஸ்வரர், அகிலாண்டேஸ்வரி அம்மன் சமேதராக காட்சியளிக்கிறார். அகஸ்தியர், காசி விஸ்வநாதரை தரிசித்து விட்டு, எட்டியத்தளி கிராமத்துக்கு வந்தார். அப்போது மன்னன் காளிங்கராயன் சனி தோஷம் நீங்க திருநள்ளாறு சனி ஆலயம் செல்வதற்கு, இவ்வழியாக வந்தான்.

அகஸ்தியர் அவனை இங்கேயே இக்கோவிலை அமைக்கச் சொன்னார்.பின், நவகிரகங்களை அமைக்கச்சொன்னார். அதன் பின் காளிங்கராய மன்னன் இக்கோவிலை அமைத்ததாக இத்தல வரலாறு கூறுகிறது. அதனால், இத்திருத்தலத்தில் சனி பகவானின் சக்தி இங்கு அதிகம் பொதுவாக, கோயில்களில் சனீஸ்வருக்கு இடது புறம் ராகுவும், வலது புறம் கேதுவும் இருப்பார்கள். ஆனால். இக்கோயிலில் இந்த அமைப்பும் மாறி உள்ளது. அதனால் ராகுவின் பார்வை சனி பகவானின் மீது படுகிறது. எனவே, இங்கு வந்து வழிபட்டால், சனி மற்றும் ராகு தோஷம் நீங்கும்.மேலும் ஜாதகத்தில் களத்தரன், செவ்வாய் தோஷமுள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால் குறைகள் நீங்கி திருமண பாக்கியம் பெறுவதாக இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூறுகிறார்கள்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *