thirvannamalai-sivaperuman-thiruther-bavani

சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருத்தலத்தில் இன்று (10-07-2018) சிவப்பெருமான் திருத்தேரில் பவனியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

தல வரலாறு

பிரம்மனும், திருமாலும் தங்களுக்குள் யார் பெரியவர் என்று சண்டையிட்டுக் கொண்டபோது, சிவபெருமான் அக்னி தூணாக நின்றார்அவருடைய அடியைத் தேடி திருமால் வராக அவதாரம் எடுத்துப் பூமியைக் குடைந்துச் சென்றார். பிரம்மா சிவபெருமானின் முடியைத் தேடி அன்ன வாகனத்தில் பறந்து சென்றார். இவர்கள் இருவராலும் சிவபெருமானின் அடிமுடியைக் காண முடியவில்லை என்பது இத்தலத்தின் தலப் புராணமாகும் நால்வர் என்று அழைக்கப்படும் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர்ஆகியோர் தேவாரம் பதிகங்களை இத்திருத்தலத்தில் பாடியுள்ளார்கள்.என்பது இக்கோவிலில் மேலும் சிறப்பானதாக கருதப்படுகிறது.சிவபெருமான் இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக காட்சியளிக்கிறார். இத்தலத்தில் உள்ள மலையே சிவலிங்கமாக இங்கு வரும் பக்தர்கள் வணங்கி வருகின்றார்கள். மேலும் இச்சந்நிதானத்தில் உண்ணாமலையம்மை. முருகன், விநாயகர், அர்த்தநாரீசுவரர், பெருமாள், பைரவர், பிரம்மலிங்கம், பாதாளலிங்கம் ஆகியோர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

இத்திருத்தலத்தில் ஆனி மாத பிரம்மோற்சவம் வெகு விமர்சியாக கொண்டாடப்படுகிறது. இந்த பிரம்மோற்சவம் தட்சணாயன பிரம்மோற்சவம் என்று அழைக்கப்படுகிறது.கொடியேற்றத்துடன் தொடங்கும் இந்த விழா, அண்ணாமலையார், உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிசஷக ஆராதனையும் பராசக்தியம்மன், விநாயகர், சந்திரசேகரர் சாமிகளுக்கு பூஜைகளும் செய்யப்படுகின்றன.அதன்படி முக்கிய நிகழ்வான இன்று (10-07-2018) சிவப்பெருமான் திருத்தேரில் பவனியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *