sabari-malai-nadai-thirappu

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் ஜூன் 16ம் தேதி மாலை 5.00 க்கு திறக்கப்படுகிறது.

சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜை நாட்களைப் போல், தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதற்காக முந்தைய நாள் மாலை 5.00 மணிக்கு நடை திறக்கப்படும்.

இந்நிலையில், தற்போது அதே போல் வரும் ஆடி மாதத்தில் முதல் 5 நாட்களும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. ஆங்கில காலண்டர்படி, வரும் 17ம் தேதி ஆடி மாதம் துவங்குகிறது. எனவே, முந்தைய நாள் 16ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைதிறக்கப்படுகிறது. எனவே, 16ம் தேதி முதல் 21ம் தேதி இரவு 10 மணி வரையில் நடை திறந்திருக்கும்.

இந்த ஐந்து நாட்களும் நெய் அபிஷேகம், சிறப்பு பூஜைகள், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, களபாபிஷேகம் நடைபெறுகிறது. பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்து வசதிகள், அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், திருவனந்தபுரம், கொல்லம் பகுதிகளில் இருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளை் இயக்க கேரள அரசு ஏற்பாடு செய்துள்ளது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *