andal-koil-thiru-aani

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் திருஆனி சுவாதி உற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று முதல் வரும் 25ம் தேதி வரை பல்வேறு அலங்காரங்களில் பெரியாழ்வார் காட்சி அளிப்பார். மேலும், வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெறும்.

ஆண்டுதோறும் ஜூன் மாதம் விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வளாகத்தில் உள்ள பெரியாழ்வாருக்கு திருஆனி சுவாதி உற்சவ விழா நடப்பது வழக்கம். இந்தாண்டு திருஆனி சுவாதி உற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக, கொடியேற்ற விழாவை முன்னிட்டு ‘கொடிபட்டம்’ மாடவீதிகளின் வழியாக மேளதாளம் முழங்க எடுத்து வரப்பட்டது. பின்னர் கொடிமரம் அருகே கொடிபட்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

தொடர்ந்து கொடியேற்றம் நடைபெற்றது. நிகழ்ச்சியில், தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி நாகராஜ் மற்றும் கோயில் ஊழியர்கள் உள்பட பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு பெரியாழ்வார் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *