sabarimalai-pradishtai-dinam

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பிரதிஷ்டை தினத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சுவாமி ஐயப்பனை சபரிமலையில் குடியமர்த்தி பிரதிஷ்டை செய்ததை நினைவுகூரும் விதமாக ஆண்டுதோறும் பிரதிஷ்டை தின விழா நடைபெறுகிறது.

இந்த ஆண்டுக்கான பிரதிஷ்டை தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்று முன்தினம் நடை திறக்கப்பட்டது. நேற்று அதிகாலை 5 மணிக்கு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம் நடந்தது.

தொடர்ந்து நெய் அபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் சுவாமி ஐயப்பனை தரிசித்தனர். தொடர்ந்து உதயாஸ்தமன பூஜை, களபாபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. மாலை 6 மணிக்கு தீபாராதனை, புஷ்பாபிஷேகம், படி பூஜை நடைபெற்றன. இரவில் பிரதிஷ்டை தின பூஜைகள் நிறைவு பெற்றன.

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மீண்டும் அடுத்த மாதம் (ஜூன்) 14-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *