thirupathy-adhar

கோடை விடுமுறையை அடுத்து திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இலவச தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க 20 மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. 

 

அதேபோல 300 ரூபாய் தரிசனத்திற்கும், நடைபாதையாக வருபவர்களும் 4 மணி நேரம் காத்து இருந்து தரிசனம் செய்கின்றனர். எனவே விரைவாக தரிசனம் செய்ய ஆதார் எண்ணை தேவஸ்தானம் கட்டாயமாக்கி உள்ளது.

 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனத்திற்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டு இருப்பதா தேவஸ்தானம் தெரிவித்து இருக்கிறது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனத்தில் சாமி தரிசனம் செய்ய ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நேரம் ஒதுக்கீடு செய்து அன்றே சாமி தரிசனம் செய்ய ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது.

சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 30 ஆயிரம் டிக்கெட்டுகளும், திங்கள் செவ்வாய்க்கிழமைகளில் 20,000 டிக்கெட்டுகளும், புதன், வியாழன் வெள்ளிக்கிழமைகளில் 17 ஆயிரம் டிக்கெட்டுகள் வழங்கப்படும் எனவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *