vilakku-etrum-murai

ஒரு முகம் ஏற்றினால் – நினைத்த செயல்கள் நடக்கும்.
இரு முகம் ஏற்றினால் – குடும்ப ஒற்றுமை கிட்டும்.
முன்று முகம் ஏற்றினால்- புத்திரதோஷம் நீங்கும்.
நான்கு முகம் ஏற்றினால் – பசு,பூமி,செல்வம், சர்வபீடை நிவர்த்தி ஆகும்.
ஐந்து முகம் ஏற்றினால் – சகலநன்மையும், ஐஸ்வர்யம் பெருகும்.

விளக்கேற்றும் திசை
கிழக்கு – துன்பம் நீங்குதல், குடும்ப அபிவிருத்தி
மேற்கு – கடன், தோஷம் நீங்கும்
வடக்கு – திருமணத்தடை அகலும்
தெற்கு நோக்கி விளக்கேற்றக்கூடாது (மரணபயம் உண்டாகும்)

எண்ணெயின் பலன்
தீபமேற்ற பயன்படுத்தும் எண்ணெயின் பலனைப் பொறுத்தும் பலன் கிடைக்கும்.
நெய் – செல்வவிருத்தி, நினைத்தது கைகூடும்
நல்லெண்ணெய் – ஆரோக்கியம் அதிகரிக்கும்
தேங்காய் எண்ணெய் – வசீகரம் கூடும்
இலுப்பை எண்ணெய் – சகல காரிய வெற்றி
விளக்கெண்ணெய் – புகழ் தரும்
ஐந்து கூட்டு எண்ணெய் (விளக்கெண்ணை, இலுப்பை எண்ணை, நெய், நல்லெண்ணை, தேங்காய் எண்ணை ) – அம்மன் அருள்
வேப்பெண்ணை – கணவன் மனைவி உறவு நலம் பெறவும், மற்றவர்களின் உதவி பெறவும்
ஆமணக்கு எண்ணை – அவரவர்கள் தங்கள் குல தெய்வத்தின் முழு அருளையும் பெற வழி செய்வது
கடலை எண்ணை, கடுகு எண்ணை, பாமாயில் போன்றவைகளைக் கொண்டு ஒருபோதும் விளக்கேற்றவே கூடாது.
மனக்கவலையையும், தொல்லைகளையும், பாவங்களையுமே பெருக்க வல்லவை இந்த எண்ணையின் தீபங்கள்.

எண்ணெய்க்கு உகந்த தெய்வங்கள்
விநாயகர் – தேங்காய் எண்ணெய்
மகாலட்சுமி – பசுநெய்
குலதெய்வம் – வேம்பு, இலுப்பை, பசுநெய் கலந்த எண்ணெய்
பைரவர் – நல்லெண்ணெய்
அம்மன் – விளக்கெண்ணெய், வேம்பு, தேங்காய், இலுப்பை, பசுநெய் சேர்ந்த 5 கூட்டு எண்ணெய்
பெருமாள், சிவன், முருகன், பிற தெய்வங்கள் – நல்லெண்ணெய் திரிகளின் வகைகளும் அவை தரும் பலன்கள் திரிகள் புதிதாகவும், கெட்டியானதாகவும் இருக்க வேண்டும்.

திரிகளும்,பயன்களும்
குத்துவிளக்கிற்கு பயன்படுத்தும் திரிகளாலும் பயன்கள் மாறுபடுகின்றன.
பருத்திப் பஞ்சு – குடும்பம் சிறக்கும், நற்செயல்கள் நடக்கும்.
வாழைத் தண்டின் நார் – முன்னோர் சாபம், தெய்வ குற்றங்கள் நீங்கி அமைதி உண்டாகும்.
தாமரைத்தண்டு நூல் – முன்வினைப் பாவங்கள் நீங்கி, நிலைத்த செல்வம் கிடைக்கும்.
வெள்ளை எருக்கம்பட்டை – செல்வம் பெருகும்.
புதிய மஞ்சள் துணி – நோய்கள் குணமாகும்.
புதிய சிவப்பு வண்ண துணி – குழந்தையின்மை தொடர்பான தோஷம் நீங்கும்.
புதிய வெள்ளை துணி திரி – அனைத்து நற்பலன்களும் கிடைக்கும். (துணியின் மீது பன்னீர் தெளித்து காயவைத்து பின்பு திரியாக்கி விளக்கேற்றுவது மிகவும் நல்லது.)

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *