trichy-urayur-navagraham

நவக்கிரகங்கள், தம்பதியுடன் காட்சி தருவதும் அவர்களை விளக்கேற்றி வழிபடுவதும் நமக்கு இன்னும் இன்னும் சக்தியைத் தரும். இந்த வழிபாடு தோஷங்கள் அனைத்தையும் போக்கி விடும்.

எப்போதெல்லாம் ஆலயங்களுக்குச் செல்கிறோமோ, அப்போதெல்லாம் தவறாமல் நவக்கிரகங்களைச் சுற்றி வந்து பிரார்த்தனை செய்வது மிகவும் அவசியம். அதேபோல், நவக்கிரகங்களை தீபமேற்றி வணங்குவதும் வழிபடுவதும், பிரார்த்தனை செய்வதும் நம் தோஷம் நீக்கி, நம்மை சந்தோஷத்துடனும் நிம்மதியாகவும் வாழ வைக்கும் !

பொதுவாக, நவக்கிரகங்கள் சேர்ந்து காட்சி தருவதே வழக்கம். சில ஆலயங்களில், சனீஸ்வரர் தனிச்சந்நிதியில் அருள்பாலிப்பார். இது காணக் கிடைக்காத ஒன்றாகவே சொல்வார்கள். நவக்கிரக ஸ்தலங்களில் அந்தந்த கிரகங்களுக்கு உரிய கோயிலில், தனிச்சந்தியில் கிரக பகவான்கள் எழுந்தருளிக் காட்சி தருவார்கள்.

அதேபோல், நவக்கிரகங்கள் தம்பதி சமேதராக காட்சி தருவது வெகு அபூர்வம். சில ஆலயங்களில் மட்டுமே இப்படியான தரிசனம் கிடைக்கும். தம்பதியாக உள்ள நவக்கிரகங்களைச் சுற்றி வந்து, விளக்கேற்றி வழிபடுவது மிகுந்த புண்ணியமும் பலன்களும் தந்தருளும் என்பது உறுதி!

திருச்சி உறையூரில் உள்ள குங்குமவல்லி அம்பாள் சமேத தான் தோன்றீஸ்வரர் கோயிலில் தம்பதி சமேதராக இருக்கும் நவக்கிரகங்களை தரிசிக்கலாம். நம் சந்ததியை ஓஹோவென சிறக்கச் செய்யும் நவக்கிரக வழிபாட்டை மறக்காமல் செய்யுங்கள். தம்பதியுடன் உள்ள நவக்கிரகங்களை மனதார வழிபட்டு, பிரார்த்தனை செய்யுங்கள். தோஷங்கள் விலகும். சந்தோஷம் பெருகும்!

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *