pazhani-murugan

முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் அக்னி நட்சத்திர கழு திருவிழா 14 நாட்கள் கோலாகலமாக நடைபெறும். பழனி முருகன் கோவிலில் நவபாஷாணத்தால் செய்யப்பட்ட மூலவர் சிலை உள்ளது.வழக்கமாக கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
அப்போது மலைக்கோவிலில் உள்ள மூலவரை குளிர்விக்கும் விதமாக பக்தர்கள் கொடுமுடியில் இருந்து தீர்த்தக்காவடி எடுத்து வந்து முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது தொன்று தொட்டும் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியாகும்.
அதன்படி கடும் கோடை காலமான அக்னி நட்சத்திர கழு நாட்களாக சித்திரை மாதத்தின் கடைசி 7 நாட்கள், வைகாசி மாதத்தின் முதல் 7 நாட்கள் விளங்குகிறது. இந்த 14 நாட்களே பழனி முருகன் கோவிலில் அக்னி நட்சத்திர கழு திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 8-ந்தேதி தொடங்குகிறது.
அக்னி நட்சத்திர கழு திருவிழாவையொட்டி பழனி கோவிலில் வருகிற 8-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை 14 நாட்களும் உச்சிக்கால பூஜையில் முருகனுக்கு சந்தனம் உள்பட 16 வகையான அபிஷேகம் செய்யப்படுகிறது. அக்னி நட்சத்திர கழு திருவிழா ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகிறார்கள்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *