thirupathy-laddu

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் மற்றும் லட்டு பிரசாதத்தின் விலையை குறைக்க பரிசீலனை செய்யப்படும் என்று திருப்பதி திருமலை தேவஸ்தானம் தொவித்து இருக்கிறது.
திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய அறங்காவலர் குழு தலைவராக பதவி ஏற்ற புட்டா.சுதாகர் யாதவ் திருமலை முழுவதும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் தங்கியிருந்த பக்தர்களிடம் புட்டா.சுதாகர் யாதவ் குறைகளை கேட்டார். திருமலையில் சுவாமி தரிசம் செய்ய அதிக நேரம் தங்க வேண்டி இருப்பதால், விரைவில் சாமி தரிசனத்துக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
அதற்கு அவர், இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்களை விரைவில் கோவிலுக்குள் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்களுக்குத்தான் நாங்கள் அதிக முன்னுரிமை வழங்குகிறோம் என்றார்.
மேலும், கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படும் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள், லட்டு பிரசாதத்தின் விலையை குறைக்கவும் நடைபெற உள்ள அறங்காவலர் குழு கூட்டத்தில் விவாதித்து பரிசீலனை செய்யப்படும், என்றார்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *