tv-malai-girivalam

திருவண்ணாமலையில் வரும் 30ம் தேதி சித்திராபவுர்ணமி கிரிவலத்தில் பங்கேற்க வரும் பக்தர்களுக்காக ஆன்லைன் கார்பார்க்கிங் முன்பதிவு வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
29ம் தேதி முதல் 30ம் தேதி வரையிலும் 190 வாகனங்களை நிறுத்துவதற்கு இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இடங்களில் www.tvmpournami.in என்ற இணையதளத்தின் மூலம் 5 மணி நேரம் இலவசமாக வாகனங்களை நிறுத்துவதற்காக முன்பதிவு செய்யலாம்.
இணையதளத்தில் வழிமுறைகளை பின்பற்றி பார்க்கிங் செய்வதற்கான இடங்களை தேர்வு செய்த பின்னர், வாகன விபரம் மற்றும் உரிமையாளரின் ஆதார் விபரங்களை பதிவிட்ட பின்னர் பார்க்கிங் இடத்தை தேர்வு செய்யலாம்.
சோதனை முறையில் செயல்படுத்தப்படும் இத்திட்டம் அடுத்த விழாக்காலங்களில், முழுவீச்சில் செயல்படுத்தப்படும் என மாவட்ட எஸ்.பி. பொன்னி கூறியுள்ளார்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *