2018-03-28-14-42-50

கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவின் 7ஆவது நாளான இன்று, நடைபெற்ற தேர்த் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் கடந்த 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் பங்குனி உத்திரத் திருவிழா நடைபெற்றது. 7ஆம் நாளான இன்று கற்பகாம்பாளுடன் கபாலீஸ்வரர் நான்கு மாட வீதிகளில் உலா வந்த தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து, சாமி தரிசனம் செய்தனர். தேரைத் தொடர்ந்து பரதநாட்டியம் ஆடிவந்த சிறுமிகள், பக்தர்களை மகிழ்வித்தனர். இந்த விழாவில் ஏராளமான பக்தர்களுடன், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் கலந்துகொண்டு ஆர்வமுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *