2018-03-26-05-10-42

பூந்தமல்லியில் திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஸ்ரீரங்கநாதர், சீனிவாசர், வரதராஜ பெருமாள் என மூன்று பெருமாளுக்கும் தனித்தனி சன்னதிகள் இந்த கோவில் வளாகத்தில் உள்ளது. இந்த நிலையில் ஆண்டுதோறும் கருட சேவை நடைபெறும் இந்த ஆண்டும் காலை வழக்கம் போல் சிறப்பு பூஜைகள், அபிசேகங்கள் செய்யப்பட்டு கோவில் வளாகத்தில் இருந்து கருட சேவையுடன், கோபுர தரிசனமும், திருவீதி உலாவும் நடைபெற்றது. மேலும் 3பெருமாளும் கோவிலின் முக்கிய நான்கு வீதி வழியாக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு இறுதியில் கோவில் வளாகத்தை சென்றடைந்து. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் எங்கும் இல்லாத வகையில் ஸ்ரீ ரங்க நாதர், சீனிவாச பெருமாள், வரதராஜ பெருமாள் என 3பெருமாளும் இந்த கோவிலில் அமைந்துள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *