2018-02-21-14-42-14

மேல்மலையனூரில் அருள்மிகு அங்காளம்மன் கோயில் தேர்த் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.
பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலில் 13 நாள்கள் நடைபெறும் மாசிப் பெருவிழா பிப்ரவரி 14-ஆம் தேதி மகாசிவராத்திரியன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து, கடந்த 15-ஆம் தேதி மயானக் கொள்ளை திருவிழா, 18-ஆம் தேதி தீ மிதித் திருவிழா நடைபெற்றன.
விழாவின் ஏழாம் நாளான தேர்த் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதனை முன்னிட்டு, காலையில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு அங்காளம்மன் தங்கக் கவசத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனைத் தொடர்ந்து, உற்சவ அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று பல்வேறு வித பூக்களைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டன.
பின்னர் மாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட அம்மன், கோயில் வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கரகோஷத்திடையே தேரில் எழுந்தருளினார். பின்னர், பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *