2018-02-20-11-14-05

அறுபடை வீடுகளில் 2வது படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு நேற்று மாலை 4.40 மணிக்கு கொடிப்பட்டம் வீதி உலா நடைபெற்றது. 12ம் திருவிழா மண்டகப்படி மண்டபத்தில் வைத்து பூஜை செய்யப்பட்ட கொடிப்பட்டத்தை 4ம்படி, படிசெப்பு ஸ்தலத்தார் கோபாலகிருஷ்ணன் அய்யர் யானை மீது கையில் ஏந்தியவாறு வீதி உலா வந்து திருக்கோயில் சேர்ந்தார். கொடியேற்றத்தையொட்டி அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு கொடிப்பட்டம் கொண்டுவரப்பட்டு 5.30 மணிக்கு திருவிழா கொடியேற்றப்பட்டது. திருவிழா மார்ச் 3ம் தேதி வரை நடைபெறுகிறது. முக்கிய விழாவான 5ம் திருவிழா 24ம் தேதி இரவு 7.30 மணிக்கு சிவன் கோயிலில் குடவருவாயில் தீபாராதனையும், 7ம் திருவிழாவான 26ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு மேல் திருக்கோயிலில் சண்முகப் பெருமான் உருகு சட்டசேவையை தொடர்ந்து சுவாமி வெற்றிவேர் சப்பரத்தில் எழுந்தருளுகிறார். மாலை 4.30 மணிக்கு தங்கச்சப்பரத்தில் சிவப்பு சாத்தியில் எழுந்தருளுகின்றார். 8ம் திருவிழா 27ம் தேதி அதிகாலை 5 மணிக்கு சுவாமி ஆறுமுகநயினார் பெரிய வெள்ளி சப்பரத்திலும், பகல் 11.30 மணிக்கு பச்சை சாத்தி சப்பரத்தில் எழுந்தருளுகிறார். 10ம் திருவிழாவான மார்ச் 1ம் தேதி காலையில் தேரோட்டம் நடைக்கிறது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *