2018-02-15-14-23-35

காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோயிலில் மாசி மக பிரமோத்ஸவத்திற்காக பிப்ரவரி 19-ஆம் தேதி (திங்கள்கிழமை) கொடியேற்றம் நடைபெறுகிறது. காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினம் கடற்கரையில் திவ்ய தேசங்களில் ஒன்றான திருக்கண்ணபுரம் ஸ்ரீ சௌரிராஜ பெருமாள் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி மாசி மக தீர்த்தம் அளிப்பது வழக்கம். இந்த நிகழ்ச்சியில் காரைக்கால், நிரவி, திருமலைராயன்பட்டினம், திருமருகல் பகுதி கோயில்களில் இருந்து பெருமாள் சிறப்பு பல்லக்கில் கடற்கரைக்கு எழுந்தருளுவார்கள். இந்தத் திருவிழா பிரமோத்ஸவமாக பெருமாள் கோயில்களில் கொண்டாடப்படுகிறது. காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோயிலில் இவ்விழா தொடங்குவதற்காக பந்தல்கால் முகூர்த்தம் புதன்கிழமை நடைபெற்றது. வருகிற 19-ஆம் தேதி திங்கள்கிழமை கொடியேற்றம் நடைபெறுகிறது. மார்ச் 1-ஆம் தேதி திருமலைராயன்பட்டினம் கடற்கரையில் மாச மக தீர்த்தவாரியும், 3-ஆம் தேதி தெப்பம், 4-ஆம் தேதி புஷ்பபல்லக்குடன் விடையாற்றி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *