2018-02-12-15-01-12

திருப்பதியில் இலவச தரிசனம் திருப்பதி திருமலையில், பிப்ரவரி 13 ஆம் தேதி மூத்த குடிமக்களுக்கும், பிப்ரவரி 14 ஆம் தேதி, கைக்குழந்தைகளுடன் வரும் பெற்றோருக்கும், இலவச தரிசனம் வழங்கப்பட உள்ளது. ஏழுமலையானை தரிசிக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் மாதந்தோறும் இரு நாட்களுக்கு, மூத்த குடிமக்கள் மற்றும் கைக்குழந்தைகளுடன் வரும் பெற்றோர்களுக்கு இலவச தரிசனம் வழங்கி வருகிறது. அதன்படி, வரும், பிப்ரவரி 13ல், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு தரிசனம் வழங்கப்பட உள்ளது. காலை, 10:00 மணிக்கு, 1,000 பேர், பகல், 2:00 மணிக்கு, 2,000 பேர், மாலை, 3:00 மணிக்கு, 1,000 பேர் என, 4,000 பேருக்கு தரிசனம் வழங்கப்பட உள்ளது. இதற்கான டோக்கன்களை, திருமலையில் அருங்காட்சியகம் எதிரில் உள்ள கவுன்டரில் ஆதார் அட்டையை காண்பித்து பெற்றுக்கொள்ளலாம். அதேபோல் பிப்ரவரி 14 ஆம் தேதி காலை 9:00 மணி முதல், மதியம், 1:30 மணி வரை, 5 வயது வரையுள்ள குழந்தைகளின் பெற்றோருக்கு தரிசனம் வழங்கப்பட உள்ளது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *