2018-01-06-15-16-48

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. சுமார் 10 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். சபரிமலையில் புத்தாண்டு தொடங்கியது முதலே பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைகள் வழிபாடு முடிந்து மகரஜோதி வழிபாடு கடந்த டிசம்பர் 30-ம் தேதி தொடங்கியது. வரும் 14-ம் தேதி வரை மகரஜோதி வழிபாடு நடக்கிறது. புத்தாண்டு முதல் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருவதால், ஐயப்பனை தரிசிக்க பக்தர்கள் 10 மணி நேரம் வரை காத்திருந்து தரிசனம் பெறுகின்றனர். பம்பையிலும் பக்தர்கள் நெரிசலில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க தேவையான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது. ஜனவரி 14-ம் தேதி மகர ஜோதி தரிசனத்துக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் அவர்களுக்கு தேவையான வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *