26

சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் 26ம் தேதி பிரசித்திப் பெற்ற மண்டல பூஜை நடக்கிறது. மண்டல பூஜையை முன்னிட்டு ஐயப்ப சுவாமி விக்ரகத்தில் தங்க அங்கி அணிவிக்கப்படுவது வழக்கம். கடந்த 1973ம் ஆண்டு திருவிதாங்கூர் மன்னர் பாலராமவர்மா 450 பவுன் எடை கொண்ட இந்த தங்க அங்கியை காணிக்கையாக அளித்தார். இந்த தங்க அங்கி ஆறான்முளா பார்த்தசாரதி கோயிலில் வைக்கப்பட்டுள்ளது.நாளை காலை 7 மணியளவில் ஆறான்முளாவில் இருந்து தங்க அங்கி ஊர்வலமாக எடுத்து வரப்படும். 25ம் தேதி மாலை தங்க அங்கி ஊர்வலம் சன்னிதானத்தை அடையும் பின்னர் தங்க அங்கி ஐயப்பன் விக்ரகத்தில் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடத்தப்படும். மறுநாள் 26ம் தேதி, பிரசித்திப் பெற்ற மண்டல பூஜை நடக்கிறது. அன்று இரவு 10 மணியளவில் கோயில் நடை சார்த்தப்படும். அன்றுடன் இவ்வருட மண்டல கால பூஜைகள் நிறைவடையும். மகரவிளக்கு பூஜைகளுக்காக மீண்டும் கோயில் நடை 30ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *