2017-11-04-14-18-05

ஏழுமலையானை தரிசிக்க திருமலை – திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் 52 ஆயிரம் ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமை அன்று திருமலை – திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி, வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கான 52,190 ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டன. இதனை பக்தர்கள் முன்பதிவு செய்து கொண்டு ஏழுமலையானை ஆர்ஜித சேவையில் தரிசிக்கலாம். இதில் சுப்ரபாதம் உள்ளிட்ட சில முக்கிய ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் குலுக்கல் முறையில் வழங்கப்பட்டு வருகிறது. இதனைப் பெற விரும்பும் பக்தர்கள் தங்களது பெயர், ஆதார் எண், டிக்கெட் எண்ணிக்கை, செல்லிடப்பேசி எண் உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு, இந்த டிக்கெட்டுகளுக்காக விண்ணப்பிக்க வேண்டும். கிடைக்க பெற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களின் செல்லிடப்பேசிக்கு குறுந்தகவல் அனுப்பப்படும். இதனைப் பெற்ற பக்தர்கள் 3 நாள்களுக்குள் தங்களது டிக்கெட்டுகளை இணையதளம் மூலம் பணம் செலுத்தி பெற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு பெற்றுக் கொள்ளாத டிக்கெட்டுகளை தேவஸ்தானம் குலுக்கல் முறையில் விண்ணப்பித்த மற்ற பக்தர்களுக்கு வழங்கும் நேரடி முன்பதிவில் உள்ள மற்ற ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளை பக்தர்கள் நேரடியாக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *