28

திருப்பதி ஏழுமலையானுக்கு வரும் அக்டோபர் 28 ஆம் தேதி புஷ்ப யாகம் நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலையில் ஏழுமலையானுக்கு ஒவ்வோரு ஆண்டும் வருடாந்திர பிரம்மோற்சவம் முடிந்த பின் வரும் திருவோண நட்சத்திரத்தன்று, தேவஸ்தானம் வருடாந்திர புஷ்ப யாகத்தை நடத்தும். அதன்படி, இந்த ஆண்டு அக்டோபர் 28-ஆம் தேதி திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு, ஏழுமலையானுக்கு புஷ்ப யாகம் நடத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. 28 ஆம் தேதி காலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமியை சம்பங்கி பிரகாரத்தில் எழுந்தருளச் செய்து அர்ச்சகர்கள் ஸ்நபன திருமஞ்சனத்தை நடத்த உள்ளனர்.
தருமஞ்சனம் முடிந்தவுடன், பலவித மலர்களால் உற்சவ மூர்த்திகளுக்கு புஷ்ப யாகம் நடைபெற உள்ளது. இதற்காக 7 டன் மலர்கள் தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து தருவிக்கப்பட உள்ளன. இதன் காரணமாக அன்றைய தினம் சில ஆர்ஜித சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *