2017-10-05-13-44-13

புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தசியையொட்டி, திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் உள்ள நடராஜருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. சித்திரை மாதம் திருவோண நட்சத்திரம், ஆனி மாதம் உத்திர நட்சத்திரம், மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம், ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தசி, புரட்டாசி மாதம் வளர்பிறை சதுர்த்தசி, மாசி மாதம் வளர்பிறை சதுர்த்தசி உள்ளிட்ட நட்சத்திரங்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்படும். ஒவ்வொரு ஆண்டும் நடராஜப்பெருமானுக்கு ஆண்டுக்கு 6 முறை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தசியையொட்டி, புதன்கிழமை பல்வேறு பூஜைப் பொருள்களைக் கொண்டு காலை முதல் அருணாசலேஸ்வரர் கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள நடராஜருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, மாலையில் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *