kovil-kopuraththil-thesa-thalaivargalin-silaigal

 

 

கோவிலின் கோபுரங்களில் பொதுவாக சிற்பங்கள் ,தான் இருக்கும்,  ஆனால் மதுரை மேலவாசி வீதி-வடக்குமாசி வீதி சந்திப்பில் உள்ள

நவநீதகிருஷ்ணன் ஆலய கோபுரத்தில்  மகாத்மா காந்தி,அவரது மனைவி கஸ்தூரிபாய்,ஜவஹர்லால் நேரு,நேதாஜி ஆகியோரது சிலைகள் இடம் பெற்றுள்ளன.

 இதே போல் புதுச்சேரி உப்பளத்தில் உள்ள நேதாஜிநகர் தேசமுத்து மாரியம்மன் ஆலயத்தின் முகப்பில் பாரதியாருக்கு சிலை இருக்கிறது.

பாரதியார் புதுச்சேரியில் தங்கியிருந்த போது இந்த ஆலயத்திற்க்கு அடிக்கடி செல்வதுண்டு. இத்தல அம்மனைப் போற்றி பாரதியார் பல பாடல்களையும் பாடியிருக்கிறார்.

இலங்கையில் வல்வை சிவன் கோவில் உள்ள கோபுரத்தின் தெற்கு பக்கத்தில் மகாத்மா காந்தியின் நூல் நெய்தபடி உள்ள திருவுருவ சிலையை காணலாம்.

 ஐயன்பாளையம் முத்தாலம்மன் கோவில் கோபுரத்திலும் காந்தி,நேரு ஆகியோரின் சிலைகளை காணலாம்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *