2017-03-09-15-00-20

திருப்பதியில் வருடாந்திர தெப்போற்சவ விழா தொடங்கியது. தெப்போற்சத்தின் முதல் நாளான நேற்று சீதா, லட்சுமணர் சமேத ஸ்ரீராமர் வலம் வந்த பக்தர்களுக்கு காட்சி அளித்தார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மாசி மாத ஏகாதசியன்று தொடங்கி பவுர்ணமியன்று முடிவு பெறும் விதமாக தெப்போற்சவ விழா நடை பெறுவது வழக்கம். அதன்படி, ஏகாதசியை முன்னிட்டு வருடாந்திர தெப்போற்சவம் நேற்று தொடங்கியது. இந்த தெப்போற்சவ விழா வரும் 12-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக, திருப்பதியில் உள்ள ஸ்ரீவாரி திருக்குளம் சுத்தம் செய்யப்பட்டு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. திருக்குளத்தின் நடுவே இரண்டடுக்கு தெப்பம் ஒன்று வடிவமைக்கப்பட்டு உள்ளது. தெப்போற்சத்தின் முதல் நாளான நேற்று மாலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை ஏழுமலையான் கருவறையில் உள்ள சீதா, லட்சுமணர், ஆஞ்சநேயர் சமேத ஸ்ரீராமர் உற்சவ மூர்த்திகள் 5 முறை தெப்பத்தில் வலம் வந்தனர். இதனை கான திரளான பக்தர்கள் திரண்டனர். விழாவையொட்டி, நேற்று முதல் வரும் 12-ந் தேதி வரை ஆர்ஜித சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *