2017-03-09-15-07-43

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கடந்த 28-ந் தேதி தொடங்கிய தெப்ப திருவிழா நிறைவடைந்தது. இது குறித்த விரிவான செய்தியை கீழே பார்க்கலாம்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தெப்ப திருவிழா நடைபெற்று வந்தது. இதையொட்டி நம்பெருமாள் தினமும் ஒரு வாகனத்தில் உள் வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நேற்று முன்தினம் மேலவாசலில் உள்ள தெப்பக்குளத்தில் நடைபெற்றது. விழாவின் நிறைவு நாளான நேற்று காலை நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி மதியம் தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபத்தை சென்றடைந்தார்.
அங்கு மாலை வரை திருமஞ்சனம் கண்டருளினார். பின்னர் அங்கிருந்து மாலையில் நம்பெருமாள் ஒற்றை பிரபை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து பந்தக்காட்சியில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பின்னர் படிப்பு கண்டருளி இரவில் மூலஸ்தானம் சென்றடைந்தார். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கடந்த 28-ந் தேதி தொடங்கிய தெப்ப திருவிழா நேற்றுடன் நிறைவடைந்தது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *