2016-10-16-15-10-12

காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் நடைபெற்று வரும் செப்பனிடும் பணிகள் காரணமாக, பிக்ஷல கோபுரம் அருகில் பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
காளஹஸ்தியிலுள்ள காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் செப்பனிடும் பணிகள் நடந்து வருகிறது. இதன் ஒரு அங்கமாக, ரூ. 31 லட்சம் செலவில் கோயிலின் வடக்கு நுழைவாயிலான பிக்ஷôல கோபுரத்தில் உடைந்துள்ள சிலைகள் அகற்றபட்டு, சுதை சிற்பங்கள் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது.
கோபுரத்தின் மேல் வளர்ந்துள்ள செடி, கொடிகள் களையப்பட்டு, சிமெண்ட் பூச்சு மூலம் விரிசலை அடைக்கும் பணியும் நடந்து வருகிறது.
இப்பணிகள் முடிவடையும் வரை கோபுரம் அருகில் செல்ல பக்தர்களுக்கும், வாகனங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கோயிலையொட்டி செல்லும் கன ரக வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *