2016-10-16-15-17-06

மணலி புதுநகரில் உள்ள அய்யா வைகுண்ட தர்மபதி 10 ம் நாள் தேர்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த மணலி புதுநகரில் உள்ள அய்யா வைகுண்டர் தர்ம பதி ஆலயத்தில் கடந்த வாரம் பிரமோச்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து தினம் ஒரு நிகழ்வாக அன்னவாகனம், கருடவாகனம், மயில்வாகனம், ஆஞ்சநேயவாகனம், சர்ப்பவாகனம், மலர்முகசிம்மவாகனம், குதிரைவாகனம், காமதேனுவாகனம், இந்திரவாகனம் என அலங்கரிக்கப்பட்ட தேரில் அய்யா தர்மபதியை வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறது. விழாவின் 10வது நாளன இன்று அய்யா வைகுண்ட பதியில் திருத்தேர் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி முழக்கத்துடன் தேர் வடம் பிடித்து இழுத்தனர். தேர் மணலி புதுநகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *