2016-08-15-11-46-55

பாலசமுத்திரம் அருள்மிகு அகோபில வரதராஜப் பெருமாள் கோயிலில் ஆவணி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனை தொடர்ந்து பல்வேறு பூஜைகள், வாஸ்து ஹோமம், வாத்யங்களுக்கு பேரிபூஜை ஆகியன நடைபெற்றன.

சங்கு, சக்கரம், திருநாமம், கருடாழ்வார், பூஜை பொருள்கள் ஆகியன பொறிக்கப்பட்ட மஞ்சள் நிறக்கொடிக்கு பூஜை நடத்தப்பட்டு கொடி ஏற்றப்பட்டது.
தொடர்ந்து, கோயிலின் உள்ளே மூலவர் பூதேவி ஸ்ரீதேவி சமேதர் அகோபில வரதராஜப் பெருமாளுக்கும், உற்சவருக்கும் பூஜைகள் நடத்தப்பட்டன.

ஆகஸ்டு 20 ஆம் தேதி திருக்கல்யாணமும், 21 ஆம் தேதி பாரிவேட்டையும், 22 ஆம் தேதி திருத்தேரோட்டமும் நடத்தப்பட்டு விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *