2016-08-15-12-12-28

பிராமணர் நலச்சங்கம் சார்பில், கிருஷ்ணகிரியில் ஆகஸ்டு 17 மற்றும் 18 ஆகிய நாட்களில், ஆவணி அவிட்ட நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிராமணர் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கிருஷ்ணகிரியில், இந்த ஆண்டுக்கான ஆவணி அவிட்ட நிகழ்ச்சியை முன்னிட்டு, ஆகஸ்டு 17 ம் தேதி காலை, 7 மணிக்கு, கிருஷ்ணகிரி புதுப்பேட்டை தேரடி தெருவில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தாவனத்தில், ஸ்ரீ வெங்கட்டரமணாச்சாரியாராலும், பழையபேட்டை பரவாசுதேவய்யர் தெருவில் உள்ள சீதாராம வீர ஆஞ்சநேயர் சமேத ராகவேந்திர சுவாமி ம்ருத்யுக பிருந்தாவனத்தில், கிருஷ்ணாச்சாரியாராலும் நடத்தி வைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

18 ம் தேதி காலை 8 மணிக்கு, கிருஷ்ணகிரி புதுப்பேட்டை கிருஷ்ணன் கோவில் சன்னதி தெருவில் உள்ள ஜகத்குரு சங்கர மடத்தில், யஜூர் உபாகர்மா, ஏ.ஜி.கே.சாஸ்திரியாலும், தேரடி தெருவில் உள்ள ராகவேந்திரர் பிருந்தாவனத்தில், வெங்கட்டரமணாச்சாரியராலும் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழையபேட்டை வீர ஆஞ்சநேய சுவாமி சமேத ராகவேந்திரர் பிருந்தாவனத்தில், கிருஷ்ணாச்சாரியராலும், வீட்டு வசதி வாரிய குடியிருப்பின் இரண்டாம் தொகுதியில் அமைந்துள்ள ஆஞ்சநேய சுவாமி சமேத வினை தீர்த்த விநாயகர் கோவிலில், காரிமங்கலம் நாகராஜா சாஸ்திரிகளாலும் நடத்தி வைக்கப்படுவதாகவும், 19 ம் தேதி, காயத்ரி ஜப கர்மா அனைத்து அந்தணர்களாலும் அனுஷ்டிக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *