குந்தி தேவி வழிபட்ட சிவலிங்கம் 5 நிறத்தில் காட்சியளிப்பது ஏன்” ?

Written by

in

தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டம்,  திருநல்லூரில்' மகாபாரதத்துடன் தொடர்புடைய பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ   பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. மாமன்னன் கர்ணனின் தாயார் குந்தி தேவி தனது பாவம் நீங்க இங்குள்ள சிவபெருமானை வழிபட்டதாக வரலாறு' அத்தகைய சிறப்புக்குரிய இத்திருக்கோவிலுக்கும்

மகாபாரதத்திற்கும் உள்ள தொடர்பை அறிந்து கொள்வோம் வாருங்கள்.- 

மகாபாரதத்தில் பாண்டுவின் மனைவி, பஞ்சபாண்டவர்களின் தாய் என்ற போற்றுதலுக்குரியவர், ப்ரித்தா  இளம் வயதிலேயே' குந்தி அரசன் போஜாவுக்கு' மகளாக தத்து கொடுக்கப்பட்டால், இதன் காரணமாகவே  ப்ரித்தா என்ற இவரின் பெயர் குந்தி தேவி என மாறியது. குந்தி தேவி அரச குடும்ப வழக்கப்படி' துர்வாச முனிவருக்கு சேவை புரிவதற்காகவும்' குருகுல கல்வி பயிலவும். துர்வாச முனிவரின் ஆசிரமத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டால்'  அங்கு குரு பக்தியுடன் துருவாச முனிவருக்கு சில ஆண்டுகள் சேவை செய்தாள். அதன் பின் அரண்மனை திரும்பும் காலத்தில்' குந்தி தேவியின் குருகுல சேவையை பாராட்டும் விதமாக துர்வாச முனிவர், குந்தி தேவிக்கு' தெய்வீக கடாட்ச அம்சத்துடன் ஆன'  குழந்தை பெறும்' வரம் தரும் மந்திரத்தை அருளினார். அதன்படி' நீ யாரை மனதில் நினைத்து  இந்த மந்திரத்தை ஜெபிக்கிறாயோ; அவரது அம்சத்துடன் உனக்கு ஆண் குழந்தை பிறக்கும், என தெளிவு படுத்தினார். அதன்பின் அரண்மனை திரும்பிய குந்திதேவி ஒரு முறை தனது. தோழிகளுடன் நந்தவனத்தில்' விளையாடிக் கொண்டிருந்தபோது. ஆகாய மார்க்கமாக சூரிய தேவன் செல்வதை கண்டால். அப்போது அவளுக்கு துர்வாச முனிவர், தனக்களித்த அரிய வரம் நினைவுக்கு வந்தது அதனை சோதிக்க நினைத்து.

சூரிய பகவானை மனதில் நினைத்தவாறு மந்திரத்தை ஜெபித்தால்' உடனே ஆண் குழந்தை ஒன்று உருவானது. அப்போது தான்' குந்தி தேவிக்கு அந்த மந்திரத்தின் மகிமை தெரிந்தது, திருமணம் ஆகுவதற்கு முன்பே இப்படி குழந்தை இருந்தால் உற்றார்' ஊராரின் அவ சொல்லுக்கு ஆளாக நேரிடும், என எண்ணி, மரப்பெட்டகத்தில் அந்த ஆண் குழந்தையை வைத்து, அதனுடன் தங்கச் சங்கிலி, தனது சேலை ஒன்றையும் வைத்து, தோழி ஒருத்தி மூலம் அந்த குழந்தையை கங்கை ஆற்றில் மிதக்க விட்டால், அதன்பின் அதிரதன் என்ற தேரோட்டி, காதில் குண்டலமும், மார்பில் கவசத்துடன் பிறந்த அந்த குழந்தையை மீட்டு தனது. சொந்த மகனாக வளர்த்து வந்தார், அந்த தெய்வமகன் தான்' மாமன்னன் கர்ணன். இதனிடையே பெற்ற மகனை அனாதையாக; கங்கை ஆற்றில் வீசி எறிந்த பாவத்திற்கு விமர்சனம் தேட வேண்டி' ஒரு நாள் இது குறித்து துர்வாச முனிவரிடம் பேசிய குந்தி தேவி, எந்த தாயும் செய்ய துணியாத பாவத்தை செய்த தனது பாவம் நீங்குவதற்கு பரிகாரம் உள்ளதா என கேட்டால்' அதற்கு துர்வாச முனிவர், மாசி மகம் அன்று ஏழு கடல்களில் நீராடி, சுயம்பு சிவலிங்கத்தை பூஜித்து உன் பாவத்தை நிவர்த்தி செய்துக்கொள் என  கூறியுள்ளார்.ஒரே நாளில் எப்படி ஏழு கடலில் நீராட முடியும் என்று கவலையுடன் இறைவனை வேண்டினாள். குந்தி தேவி அப்போது விண்ணிலிருந்து கேட்ட அசரீரியில் ' திருநல்லூர் தளத்தில் ஒரு புனித தீர்த்தக்கேணி இருக்கிறது. அதை ஏழு கடலாக நினைத்த நீராடு' என அந்த குரல் கேட்டுள்ளது அதன்படி' மாசி மகம் அன்று சாப விமோசனம் பெறுவதற்கு குந்தி தேவி அந்த புனித தீர்த்தக் கேணியில் நீராடி சிவபெருமானை வழிபட்டதாக ஐதீகம், கருவறையில் அருள் பாவிக்கும் இறைவனின் திருப்பெயர் அருள்மிகு ஸ்ரீ பஞ்சவர்ணேஸ்வரர், உற்சவர், கல்யாண சுந்தரேஸ்வரர், தாயார் அருள்மிகு ஸ்ரீ கல்யாண சுந்தரி, கிரி சுந்தரி, 
ஈசன் வன குன்றின் மீது கோவில் கொண்டுள்ளார்.

இங்குள்ள இறைவனின் சிவலிங்கத் திருமேனி வேறு எங்கும் காண முடியாத அரியதொரு வடிவமாக. தினமும்   தாமிரம், இளஞ்சிவப்பு, தங்கம், மரகதப்பச்சை தவிர இனம் கண்டறிய முடியாத மேலும் ஒரு நிறம் என ' ஐந்து நிறமாக காட்சியளிப்பது உலகில் வேறு எங்கும் காண முடியாத அதிசய நிகழ்வாகும். இது ஐந்து பஞ்சபூதங்களையும், பஞ்சபாண்டவர்கள் ஐந்து பேரையும் குறிப்பதாக அமைந்துள்ளது இதன் பொருள் கர்ணனைத் தவிர்த்து இனி உனக்கு ஐந்து பிள்ளைகள் மட்டும்தான் என மூத்த மகன் கர்ணனின் நிலை குறித்து சூட்சகமாக இறைவன் குந்தி தேவிக்கு உணர்த்தியதாகவும் நம்பப்படுகிறது.
காலை 6 மணி முதல் 8.24 வரை தாமிர நிறம், 8.25 முதல் 10.48 வரை இளஞ்சிவப்பு, பின் 10.49க்கு உருகிய தங்க நிறம், மாலை 3.36க்கு மரகதப்பச்சை நிறத்தில்  இந்த சிவலிங்க திருமேனி காட்சி தருகிறது. லிங்கம் மாறுகிறது. பிறகு மாலை 6.00 மணிக்கு மேல் குறிப்பிட முடியாத நிறத்தில் காணப்படும் இதை காண கண் கோடி வேண்டும். கோவிலில் ஏழு கடல் என்னும் பெரிய தீர்த்தம் உள்ளது.

இதில் குந்தி தேவி நீராடியதால்' அந்த தீர்த்தக்கேணியானது "சப்த சாகர தீர்த்தம்" என்று அழைக்கப்படுகிறது. தல விருட்சம், வில்வம், இதற்கு மற்றொரு சிறப்பும் உண்டு. ஒருமுறை கைலாயத்தில் ஆதிசேடனுக்கும் வாயு பகவானுக்கும் இருவருக்குள் யார் வலிமையானவர்  என்பதில் போட்டி ஏற்பட்டது. அப்போது ஆதிசேடன் கைலாய மலையைத் தனது ஆயிரம் மகுடங்களால் பற்றிக்கொள்ள,  வாயு பகவான் தனது வலிமையை வெளிப்படுத்த  மலையை அசைக்க முயன்று பலத்த சூறாவளி புயல் காற்றை வீசினார். இந்த இருவருக்கிடையே ஏற்பட்ட போட்டியால்  தேவர்கள், முனிவர்கள், கந்தவர்கள் அஞ்சு நடுங்கினர். அப்போது அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஆதிசேடன் தனது பிடியை தளர்த்திக் கொண்டார்.

இது தான் சரியான சந்தர்ப்பம் என நினைத்த வாய்வு பகவான் கைலாய மலை சிகரங்களைப் பெயர்த்துக் கொண்டு வந்து தென்னாட்டில்' திருநல்லூரிலும், மற்றொன்றை அதன் அருகிலுள்ள ஆவூரிலும் வீசினார்.  நல்லூரில் விழுந்த அந்த மலைச்சிகரமே  அருள்மிகு ஸ்ரீ பஞ்சவர்ணேஸ்வரர் எழுந்தருளியுள்ள குன்றாகும். இதனால் தென் கயிலாயம் எனவும் இத்தலம் அழைக்கப்படுகிறது, அருணகிரிநாதர் திருப்புகழில் இங்குள்ள முருகனை பாடியுள்ளார். முருகப் பெருமான் ஒரு திருமுகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு வள்ளி, தெய்வானை சமேதராய் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார்.மாசி மகம் அன்று குந்தி தேவி நீராடிய புனித தீர்த்தக்கேணியில் நீராடினால் ஏழு கடல்கள் நீரும் பெருக்கெடுத்து நம் பாவங்களை போக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை, 

பொன்.கோ. முத்து திருவள்ளூர்