ஈரோடு மாவட்டம்,மயிலாடி' யில், சுமார் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ண பெருமாள் திருக்கோவில் உள்ளது. இங்கு அருள்புரியும் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா அப்பகுதி விவசாயிகள் சிலர் குலம் வெட்டுவதற்காக பூமியை தோண்டிய போது சுயம்புவாக தோன்றியவர் ஆவார். இவருக்கு அவல், சர்க்கரைப் பொங்கல், பால், வெண்ணை ஆகியவை கொண்டு நிவேதனம் செய்து வழிபட்டால், திருமண வரம் கை கூடும், தொழில் விருத்தி லாபகரத்துடன் நடக்கும், ஸ்ரீவீர ஆஞ்சநேயர் சுவாமி எழுந்தருளி உள்ளார்.
இவருக்கு புதன் மற்றும் சனி ஆகிய நாட்களில் வெற்றிலை மாலை தொடுத்து. அவரது திருமேனியில் அலங்கரித்து வழிபட்டால், மனவேதனையை நீங்கி எடுத்த காரியத்தில் வெற்றி கிட்டும் என்பது இங்குள்ள பக்தர்களின் நம்பிக்கை, கிருஷ்ண ஜெயந்தி, வைகுண்ட ஏகாதேசி, புரட்டாசி வழிபாடு ஆகியவை இங்கு சிறப்புடன் நடைபெறுகிறது. வாழ்க்கையில் தள்ளாடி தவிப்புக்கு உள்ளான"அன்பர்கள் மயிலாடி ஸ்ரீ சென்று கிருஷ்ணா பெருமாளை வழிபட்டால், இன்னல் விலகி வாழ்வில் நிமிர்ந்து நிற்பது நிச்சயம்.
பொன்.கோ.முத்து திருவள்ளூர்